உள்ளூர் முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள பெண் கிராம அலுவலர்கள் இரவு பணிகளிலிருந்து விலகல்

அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை காரணம் காட்டி, இன்று தொடக்கம் அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இரவுப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று இலங்கை கிராம அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

இரவு நேரக் கடமைகளை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பற்ற அல்லது மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் அமைந்துள்ள அலுவலகங்கள் மூடப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது

அத்துடன் உத்தியோகபூர்வ பணிகள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் என்றும் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஷாமலி வத்சல குலதுங்க தெரிவித்தார்.

இதற்கிடையில், இரவுப் பணிகளில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெண்கள் மற்றும் சிறுவர்கள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் உறுதியளித்தார்.

கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்