உள்ளூர் முக்கிய செய்திகள்

கச்சத்தீவில் புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்தல்

இது குறித்து மேலும் தெரிஎயவருவதாவது கச்சதீவு முன்னரங்க பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் கச்சதீவுக்குள் செல்ல விசேட அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தினை நோக்கி பயணித்த பொழுது சிவில் உடை தரித்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை சூழந்து கொண்டு இந்தியாவில் இருந்தா வருகை தந்தீர்கள் ? ட்ரோன் கமரா கொண்டு செல்கிறீர்கள் என விசாரித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

அத்துடன் ஊடகவியராளர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்
இலங்கை ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பித்ததுடன் தம்மை சோதனைக்குட்படுத்திய சிவில் உடையில் இருந்தவர்களிடம் வினாவிய போது தாம் கடற்படை புலனாய்வாளர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து எமது கைப்பைகளை சோதனையிடுமாறும் ட்ரோன் கமராவினை கொண்டு செல்லவில்லை என தெரிவித்த பொழுதும் ஊடகவியலாளர்களை புலனாய்வாளர்கள் ஒளிப்படமெடுத்தனர்.

தொடர்ந்து நீங்கள் எதற்காக புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் புலனாய்வாளர்களுடன் முரன்பட்ட பொழுது குறித்த பகுதியில் தரித்து நின்ற கடற்படை ஊடக பிரிவினர் அவர்கள் ஊடகவியலாளர்கள் பரிசோதனை செய்தே அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவித்து ஊடகவியலாளர்களை செல்ல அனுமதி வழங்கியதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்