முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கைத்தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

