தமிழக தலைநகர் சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை முதல்வர் பிரியா அறிவித்துள்ளார்
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பாதீட்டில்; சென்னை மாநகரை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்கு 5 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது
மேம்பாலங்கள் மற்றும் தொடரூந்து மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி 42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

