உள்ளூர்

தையிட்டி திஸ்ஸ விகாரை காணியின் உரிமையாளர்கள்; கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி தமது காணியை கோரினர்

காணிகளுக்கான தமிழர்களின் உரிமை போராட்டத்தினை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் தையிட்டி காணி உரிமையாளர்கள் கொழும்பில் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்

உரிமைகளுக்கான போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என ; தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமார் சாருஜன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நில உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள் எங்கள் நிலங்களை எங்களிடம் தருவதாக உறுதியளித்தன.
ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமே இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதமைக்கு காரணம் என நாங்கள் கருதுகின்றோம்.

இவை எங்கள் மூதாதையர்களின் நிலங்கள்,அங்குள்ள பௌத்த ஆலயத்தின் மதகுரு கூட இந்த நிலம் எங்களிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் அவர் இதனை பொதுவெளியில் தெரிவிக்க தயங்குகின்றார்.

எங்களின் இந்த போராட்டம் சிங்கள மக்களிற்கோ அல்லது பௌத்தமதத்திற்கோ எதிரானது இல்லை.

எங்கள் நிலங்களை மீளப்பெறுவதற்காகவே நாங்கள் போராடுகின்றோம்.
உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என நாங்கள் தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்