உள்ளூர்

கொழும்பு இரவு களியாட்ட விடுதிக்கு சென்ற மகிந்தவின் 2வது மகனும் மருமகளும் களேபரம் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயம்

யோசித ராஜபக்ஸவுடன் சென்ற சிலர் நடத்திய தாக்குதலில் கொழும்பு யூனியன் பிளேஸ், பார்க் வீதியிலுள்ள இரவு களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

யோசித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் இந்தக் குழுவினர் இன்று அதிகாலை இரவு களியாட்ட விடுதிக்கு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யோசித ராஜபக்ஸவும் அவரது மனைவியும் இரவு களியாட்ட விடுதி வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரவு களியாட்ட விடுதிக்குள் நுழையும்போது கைகளில் அடையாளம் காண்பதற்கான பட்டியை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இரவு களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்