மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் இணைந்துக்கொண்டுள்ளார்
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டுள்ளது
பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார்
பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் ஆகியன ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கடந்த 15 ம் திகதி சைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து, எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து, பிரிந்திருந்த கருணா – பிள்ளையான் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

