உலகம் முக்கிய செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது.

இதன் காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக நேற்று (21-03) அறிவிக்கப்பட்டது.
அத்துடன் கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே நேற்று (21-03) இயக்கப்படவிருந்த இரண்டு சேவைகளையும் இரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தநிலையில், சில விமானங்கள் தற்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினத்துக்குள் விமான நிலையத்தின் பணிகளை முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்