உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றார்

இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவரும் பாப்பரசர் பிரான்சிஸ் இன்றைய தினம் சிகிச்சை நிறைவடைந்து அங்கிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வத்திக்கானில் குறைந்தது இரண்டு மாதங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கடுமையான சுவாச தொற்று காரணமாக இத்தாலியின் ரோமில் உள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சுவாச தொற்றின் விளைவாக அவருக்கு நியூமோனியா நோய் நிலைமை ஏற்பட்டது.

சுமார் 5 வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஆபத்தான கட்டத்திலிருந்து விடுபட்டுள்ள நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்