உள்ளூர் முக்கிய செய்திகள்

இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்கள் இறைபதம் அடைந்தார்

இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு சர்வதேச இந்துமத பீடம் இரங்கல் தெரிவித்துள்ளது.

சர்வதேச இந்துமத பீடம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்கள் நேற்று 25.03.2025 இறைபதம் அடைந்தார்.
குருக்கள் வேத ஆகம பாடசாலையை நிறுவி நூற்றுக்கணக்கான அந்தண சிவாச்சாரியார்களை உருவாக்கியவர்.
பல கும்பாபிஷேகங்களுக்கு பிரதானமாக இருந்து இறைபணி ஆற்றியவர்.
அதேவேளை வைதீக உபாத்தியராகவும் அந்தண பெருமக்களுக்கும் ஆன்மிக பணி செய்ததுடன் இந்து மதத்துக்கும் சிறப்பை ஏற்படுத்தியவர்.
அவரது இறப்பு இந்து உலகுக்கு பேரிழப்பு. அவரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து இந்து மக்களும் எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்வோமாக! என சர்வதேச இந்துமத பீடம் சார்பாக சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்