உள்ளூர்

கடற்தொழிலாளர் பிரச்சனை  பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர் சங்க தலைவர்களின்  பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது

இலங்கை இந்தியமீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று  ஆரம்பமாகியது.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கியபிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின்,தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர்சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ்,பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இலங்கை மீனவர்பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ், செயலாளர் முகமட் ஆலம், ஊடகபேச்சாளர் அ.அன்னராசா, செயற்குழு உறுப்பினர்வீ, சுப்பிரமணியம்,பிரதி செயலாளர் கே.றீட்டாவசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்