உள்ளூர்

பிரிட்டனின் தடையால் பதறும் சிறிலங்கா கல்விச் சமூகம்

 

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது வருங்காலத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையலாம்.

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக கரிசணை செலுத்த வேண்டும்.
மியன்மார், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நிலையில், எதற்காக இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (25-03) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதிகள் இருவர், முன்னாள் கடற்படை தளபதியொருவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த ஒருவர் ஆகியோருக்கு எதிராக பயணத்தடை விதித்துள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகிறது.

எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டுவரப்படும் யோசனைகளிலிருந்து அமெரிக்கா விலகியிருக்கிறது.

அமெரிக்காவின் எவ்வித ஒத்துழைப்பும் இன்றியே இது இடம்பெறுகிறது.
மனித உரிமைகள் பேரவைக்குள் தான் ஏதெனுமொரு நாட்டுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அவை தொடர்பில் ஆராய்ந்து மனித அறிக்கை தயாரிக்கப்படும்.

ஆனால் மனித உரிமைகள் பேரவைக்கும் தடைகளை விதிக்க முடியாது. பாதுகாப்பு சபைக்கு சென்ற பின்னரே இது குறித்த தீர்மானங்களை எடுக்க முடியும்.

ஆனால் இங்கு அவ்வாறு எந்த நடைமுறையும் இடம்பெறவில்லை.
தடை விதிப்பதாயின் ஒரு நாட்டுக்கு எதிராகக் கூட விதிக்க முடியும்.
இதற்கு முன்னர் எமது இராணுவத்தினர் 58 பேருக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக்கிறது.

அந்த வழியில் தான் தற்போது பிரித்தானியாவும் இவ்வாறு தடை விதித்துள்ளது.
அடிப்படை மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள் முதலான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடையானது ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு எதிரானதாகக் கூட மாற்றமடையக்கூடும்.

இவ்வாறான நிலைமையை நாமே உருவாக்கிக்கொண்டோம்.
அதற்கு சிறந்த உதாரணம் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இன்னும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு தேசிய ரீதியில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த ஆணைக்குழுக்களில் உள்ள நிபந்தனைகள் எந்தவொரு அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏனைய நாடுகளிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுக்கு சார்பானவர்களது அழுத்தங்களும் இதில் தாக்கம் செலுத்துகின்றன.
வெறுமனே முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு தடை விதிக்க முடியும்?

எவ்வித விசாரணைகளும் இன்றி பக்கசார்பாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படையின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொருளாதாரக் குற்றமிழைத்துள்ளதாக யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டுக்கு தடை விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் கூட காணப்படுகிறது.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை கூட நீக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. இஸ்ரேல், மியன்மார் போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லையா? எதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை மாத்திரம் இலக்கு வைக்கப்படுகிறது?

எனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திடம் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதை தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வணிக சட்டப்பிரிவின் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்