உள்ளூர் முக்கிய செய்திகள்

காலனித்துவ ஆட்சியில்இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு மன்னிப்பு கேட்காத பிரிட்டன் எனக்கெதிராக தடைகளை விதிப்பது விசித்திரம் – வசந்த கரனாகொட

இலங்கையிலும் இந்தியாவிலும் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இழைத்த அநீதிகள் அட்டுழியங்களிற்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில் பிரிட்டன் இலங்கைக்கு எதிராக மனித உரிமைதடைகளை விதிக்கின்றது என பிரிட்டன் தடைவிதித்துள்ள நால்வரில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தனது கடந்தகால செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ள அவர் காசா சிரியா ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற பகுதிகளில் இடம்பெறும் விடயங்கள் குறித்து ஏன் பிரிட்டன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் அவுஸ்திரேலியா கனடா போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரமாக செயற்படுகின்றனர் தனி ஈழம் என்ற தங்களின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வசந்த கரனாகொட விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய தலைவர்களிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்காக அரசியல்வாதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயல்கின்றனர் அதற்காக நிதி திரட்டுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இது ஆரம்பமாகயிருக்கலாம், வெளி அழுத்தங்களால், மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி,முன்னாள் மனித உரிமை சட்டத்தரணியான பிரிட்டிஸ் பிரதமர் பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்காக இதனை பயன்படுத்துகின்றார் இது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தடைகளிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்,பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவிய பாதுகாப்பு அதிகாரிகளிற்கு ஆதரவாகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்