முக்கிய செய்திகள்

13 நீதிமன்றங்களில் 47 வழக்குகள் 20 பிடிவிறாந்துகள் 53 வயதுப் பெண் கைது

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும் காலி ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரை கைது செய்வதற்கான 20 பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவிசாவளை – பொரலுகொட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

கைதான பெண் ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சொகுசு வீடுகளை வாடகைக்குப் பெற்று வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல