நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே நித்தியானந்தா இறந்துவிட்டதாக காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காணொளி வெளியாகியதையடுத்து அவரை பின்பற்றும் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும்,அவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நித்தியானந்தாவின் சகோதரி மகன், நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் காணொளி ஒன்றில் தெரிவித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

