உள்ளூர் முக்கிய செய்திகள்

பெண்களின் படங்களை நிர்வாணமாக்கிய 20 வயது இளைஞன் விளக்கமறியலில்

செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் மாற்றி விநியோகித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் அனுராதபுர துணைப் பிரிவினரால் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்