ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளுக்கு இடையே போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி களத் தடுப்பபை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது
இதில், அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ஓட்டங்கள் , துருவ் ஜூரல் 35, ஓட்டங்கள் ரியான் பராங் 30 ஓட்டங்கள்;, சஞ்சு சாம்சன் 15 ஓட்டங்கள்; எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து, 174 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
இதன் ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
174 ஓட்டங்கள்இலக்கை 17.3 ஓவர்களில் எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிலிஃப் சால்ட்- 65, விராட் கோலி- 62, தேவ்தட் படிக்கல்- 40 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதையும் படியுங்கள்>சர்வதேச கிரிக்கெட் பேரவை கொண்டுவரவுள்ள மாற்றம்!