உள்ளூர்

வரி தொடர்பில் அமெரிக்காவுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் நடைபெறுகின்றது- தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.

வரி விவகாரத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு மாறாக நிதி அமைச்சு சார்பில் அமெரிக்காவின் வர்த்தக துறைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே கிடைக்கப் பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திற் கொள்ளும். குறித்த வரி விதிப்பில் இலங்கைக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்