உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாரென அறிய ஆவலுடனுள்ளோம்- அருட்தந்தை சிரில் காமினி

தெரியவரும என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அதற்காக காத்திருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி, தெரிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என கூறினார்.
இந் நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது.

இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி, ஏப்ரல் 21 ஆம் திகதிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் அறிக்கையில் வலுவான நம்பிக்கை இருப்பதாகவும்; ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்

முன்னதாக, புதிய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்கும் என்று தெரியவில்லை என்றும், அப்படியானால், புதிய அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் என்றும் பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்து

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்