முக்கிய செய்திகள்

RCB அணிக்கெதிரான போட்டியிலிருந்து சஞ்சு சாம்சன் விலகல்!

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதியில் உபாதை காரணமாக முன்னதாக இரண்டு போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவர் இந்தப் போட்டியில் இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சஞ்சு சாம்சன் தற்போது குணமடைந்து வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் குழுவினால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கான காலம் குறித்து எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், சஞ்சு சாம்சன் பங்கேற்காத போட்டிகளில் ரியான் பராக் அணித்தலைவராக செயற்படுகின்றார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கும் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதையும் படியுங்கள்>குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல