உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இன்றுவரை 429 முறைப்பாடுகள் பதிவு!

2025 உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பான மொத்தம் 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பெற்றுள்ளனர்.

இந்த முறைப்பாடுகளில் 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்களும் 98 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில், 23 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தேர்தல் தொடர்பான மொத்தம் 31 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

இவற்றுள் 03 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 20 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.

இந்தக் காலகட்டத்தில் பொலிஸார் 02 வேட்பாளர்களையும் 06 ஆதரவாளர்களையும் கைது செய்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் 2025 மே 06 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கான தபால்மூல வாக்குப் பதிவு நடவடிக்கைள் இன்று காலை ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>தலைக்கவசம் பயன்படுத்துவோருக்கு எழுந்துள்ள புதிய நெருக்கடி!

https://www.youtube.com/@pampaltv-9029/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்