உள்ளூர் முக்கிய செய்திகள்

தலைக்கவசம் பயன்படுத்துவோருக்கு எழுந்துள்ள புதிய நெருக்கடி!

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டாலோ யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரையும் அவரது உடைமைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிபவர்களால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதால், பொலிஸ் தலைமையகத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் தலைக்கவசம் அணிந்தவர்களால் செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமே தலைக்கவசம் அணிய வேண்டும் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள்>2025ம் ஆண்டு நேற்றுவரை (22-04) 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது https://www.youtube.com/@pampaltv-9029/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்