உள்ளூர் முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

2020 – 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

‘2020 – 2024 ஓய்வூதிய ஒன்றியம்’ குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் இதேவேளை, 2025ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறுவோருக்கு 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுட்டிக்காட்டினர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் பேச்சுவார்த்தைக்காக பொலிஸாரால் செயலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதிநிதிகள் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்று கருத்து தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி, இது தொடர்பாக அறிந்திருப்பதாகவும் பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிடம் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்பளித்திருப்பதாகவும் தேர்தல் முடிந்து இரண்டு வார காலத்தின் பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்