உள்ளூர் முக்கிய செய்திகள்

பிரதமரின் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் பொறுப்புக்கூறல் இடம்பெறுமா என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கேள்வி

அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்

இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

மே3 ம் திகதி அமைதிக்காலம் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிற்கான பிரச்சாரங்களில் தொடர்ந்தும் ஈடுபடுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது தேர்தல்விதிமுறைகளை நேரடியாக மீறும் செயலாகும்.

இது குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளது.

அமைதிக்காலத்தை மீறுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை வழமையான ஒரு மீறல்அல்ல.

இதுதேர்தல் நியாயபூர்வதன்மையின் அடிப்படையையே மீறுவதாகும்.

பிரதமரின் இந்த உரை வீடியோவில் பதிவாகியுள்ளது,நாடு முழுவதும் இதுஒளிபரப்பாகியுள்ளது. பொறுப்புகூறல் இடம்பெறுமா?

நாட்டின் நிறைவேற்றதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர் சட்டத்தினை மீறுமாறுகோருவது,இது ஒரு அரசியல் சம்பவம் மாத்திரம்,இது அமைப்புமுறை மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தமாகும்.

பொதுமக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு உடனடிநடவடிக்கைகள் அவசியம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்