உள்ளூர்

ரணில் அரசு ஐ.எம்.எப் உடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டையே அநுர அரசு தொடர்கின்றதென சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுவர்களின் சேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) இணக்கப்பாட்டை மாற்றியமைத்து புதிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை தவிர்த்துவிட்டு பழைய ஐஆகு ஒப்பந்தத்தையே தொடர்கிறது.

இதன் விளைவாக, பொதுமக்கள் தற்போது கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும், மின்சாரக் கட்டணத்தை 33 வீத குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது மீண்டும் கட்டணத்தை அதிகரிக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்