உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் 4 சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதென கஜேந்திரகுமார் தெரிவிப்பு

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். ஏனைய சபைகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் உள்ள கட்சிக்கு ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் நாம் அவற்றை வழங்குவோம்.

ஆனாலும், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாமல் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கோரியிருந்தபோதும், பங்காளிக் கட்சிகளுடன் பேசி முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்