உள்ளூர்

கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது

இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தினை மக்னிட்ஸ்கி தடைகளிற்காக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய சர்வதேவ அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்துள்ளோம்.

கமால் குணரட்ணவுடன் இணைந்து பணியாற்றிய 58வது படைப்பிரிவின் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களிற்காக அமெரிக்கா தடை விதித்துள்ளதையும் அவரும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பிரிட்டனும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

2009 இல் கமால் குணரட்ண சவேந்திரசில்வாவின் கட்டளை தளபதியாக செயற்பட்ட ஜகத்ஜயசூரியவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.( 2017 இல் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இவருக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தினை தாக்கல் செய்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.)

(அவுஸ்திரேலியாவிற்கு அவர் பயணம் மேற்கொள்வதை தடுப்பதற்காக குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதையும் தடைகளிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்)

யுத்த கால பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய இவர்களின் தலைமை அதிகாரி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளதையும்,சுட்டிக்காட்டியுள்ளோம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்