வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என தெரியவருகிறது.
படுகாயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையின்; அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-05-2025 தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதியின் உறவினர்களால் நேற்று (19-05) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த கைதியின் உறவினர்கள், இச்சம்பவம் பற்றி வெளியிடும் பட்சத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறைக்காவலர்களால் கைதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

