உள்ளூர்

வவுனியா சிறையில் சிறை காலர்கள் யாழ்ப்பாண கைதி மீது கொலைவெறி தாக்குதல்

வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என தெரியவருகிறது.

படுகாயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையின்; அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 15-05-2025 தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதியின் உறவினர்களால் நேற்று (19-05) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த கைதியின் உறவினர்கள், இச்சம்பவம் பற்றி வெளியிடும் பட்சத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறைக்காவலர்களால் கைதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்