உள்ளூர்

மகிந்த மீது அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கோரவேண்டுமென சாகர காரியவசம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் தங்க கழிப்பறைகள் மற்றும் தங்க குதிரைகள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சாகர காரியவசம்,
‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு அந்தப் பொய்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை.இது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தன்னிடம் இருந்ததாக கூறும் கோப்புக் கட்டை யாராவது திருடிவிட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

அநுரகுமார தான் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஏழு மாதங்களுக்கும் மேலாகியும், சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டு குறித்தும் எந்த விசாரணை தொடங்கப்படவில்லை.
சீனாவிலிருந்து மகிந்த ராஜபக்சவுக்கு பணம் வழங்கப்பட்ட கணக்கு எண்கள் கூட ஜனாதிபதி அனுர குமாரவிடம் இருப்பதாகக் கூறிய அவர், அந்தக் கணக்கு எண்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், இந்த நாட்டை போரிலிருந்து காப்பாற்றிய, எதையும் திருடாத முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சாகர காரியவசம் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்