உள்ளூர் முக்கிய செய்திகள்

விபத்தில் மரணமடைந்த இந்திய தூதரக அதிகாரியின் மகனும் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் – கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்த விபத்தில் அவரின் மனைவி (சீதாலக்ஷ்மி – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவுக்குச் சுற்றுலா சென்று நாடு திரும்பிய பின்னர், சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருடைய (பிரபாகரனின்) மூத்த மகனான 27 வயதுடைய அக்ஷை சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்