உலகம்

இராணுவ செலவினங்களை அதிகரிக்க நேட்டோ தலைவர்கள் ஒப்புதல்..!

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கியுள்ளன.

இதில் உள்ள நாடுகள் தங்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கும், இந்த நிதி ராணுவ செலவினம் என்று அழைக்கப்படுகிறது.

நேட்டோவிற்கு அமெரிக்காதான் அதிக அளவில் பணம் ஒதுக்கி வந்தது. டொனால்டு டிரம்ப், 2ஆவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதிவு ஏற்றபின் மற்ற நாடுகளும் அதிக அளவில் நேட்டோவின் இராணுவ செலவினத்திற்கு செலவழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இல்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவதாக மிரட்டல் விடுத்தார்.

2035ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் அதன் ஜிடிபியில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

தங்களால் அவ்வளவு தொகை செலவழிக்க முடியாது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 32 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

தனிப்பட்ட மற்றும் கூட்டு கடமைகளை உறுதி செய்ய ஒருங்கிணைத்த பாதுகாப்பு தேவைகளுக்காக ஜிடிபி-யில் 5 சதவீதம் முதலீடு சேய்ய நேட்டோ நாடுகள் ஒப்புக்காண்டுள்ளன என நேட்டோ மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>கம்போடியா உடனான எல்லைகளை தாய்லாந்து மூடியுள்ளது!

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்