கனடா

ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் துப்பாக்கி சூடு:2 பேர் படுகாயம்!

டொராண்டோ ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், டான் மில்ஸ் சாலை மற்றும் செயின்ட் டெனிஸ் டிரைவ் சந்திக்குமிடத்தில், எக்லிங்டன் அவென்யூ அருகே உள்ள பகுதியில், இன்று அதிகாலை 2 மணிக்கு முன் நிகழ்ந்துள்ளது.

17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் இருந்தாலும், மிகுந்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை இதற்கான விசாரணையை தற்போது டொராண்டோ பொலிஸின்; குற்றவியல் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்>சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றுவிட்டனர்

https://www.youtube.com/@pathivunews/videos

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக
உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனையும் மோசடிகளில் இருந்து தப்புவதற்கும் சிக்குவதனை