உலகம் முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் பலி, 400 பேர் காயமென காசா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் காசா மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் உயிரிழந்து, சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல மரணங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் பலியானவர்களின் பிணங்களை குடும்பத்தினர் எடுத்து செல்லும் போது ஏற்பட்ட அவலக் காட்சிகள் உலகை உலுக்கியன.

இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெற்ற போர் நடவடிக்கையில் இதுவரை 56,156 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 132,239 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 12 நாட்களாக இடம்பெற்ற மோதலில் ஈரானில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4,870 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் அடுத்த வாரம் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான வன்முறை; தற்காலிகமாக ஓய்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை மிகவும் பதற்றமாகவும், அச்சமூட்டுவதாகவும் தொடர்கின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்