உள்ளூர்

கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று நடைப்பெற்றது

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில், கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் திங்கட்கிழமை (30) பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 4 இல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கம், கடந்த ஜூன் 25ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுவில் எழுப்பப்பட்ட, கரைவலை மீன்பிடித் தொழிலில் ட்ராக்டர்கள் அல்லது வின்ச் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதாகும்.

அகில இலங்கை கரைவலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வண. லெஸ்டர் நோனிஸ் அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் சுமார் 800 கரைவலை உரிமையாளர்கள் இருப்பதாகவும், ஒரு கரைவலையை நம்பி சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்தனர்.

சுனாமிக்குப் பிறகு கடலின் ஆழம் அதிகரித்துள்ளதால், கைகளால் வலைகளை இழுப்பது கடினமாகிவிட்டன. எனவே வின்ச் பயன்படுத்துவது அத்தியாவசியமாகிவிட்டது.

வின்ச் தடை செய்வதன் மூலம் கடற்றொழிலாளர் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும், கடன் பெற்று வாங்கிய ட்ராக்டர்கள் மற்றும் வின்ச்களால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் பிரதிநிதிகள் குழு குறிப்பிட்டது.

நாட்டிற்குத் தேவையான சத்தான மீன்களையும், உள்நாட்டு உற்பத்திக்கு அத்தியாவசியமான மீன்களையும் (அம்புல் தியல் ஜாடி) வழங்கும் கரைவலைத் தொழிலைப் பாதுகாக்குமாறும், இந்தத் தடையை நீக்க வேண்டும் என்றார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பிரதிநிதிகள், 1984ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின்படி கரைவலை மீன்பிடித் தொழில் இயந்திரமயமாக்கப்படாத பாரம்பரிய முறை என்றும், மனிதர்களால் கைகளால் இழுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

சில மாவட்டங்களில் ட்ராக்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ட்ராக்டர் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், 1.5 கடல் மைல் எல்லைக்குள் கரைவலை இழுக்கப்பட வேண்டும் என்றும் விளக்கினர்.

வளங்களைப் பாதுகாப்பதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களுக்கு இணங்குவதன் முக்கியத்துவத்தை பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்கால சந்ததியினருக்காக மீன் வளத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது . கடந்த காலத்தில் நடந்த தவறான நடவடிக்கைகளை மீண்டும் செய்யாமல், நிலையான மற்றும் நவீன கடற்றொழில் துறையை நோக்கி நாட்டை வழிநடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்.

மக்களின் வாழ்க்கை மட்டத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இந்த பிரச்சினைக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவோம்.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே கருத்துத் தெரிவிக்கையில்,

உலகில் மிகவும் மாசுபட்ட பெருங்கடல்களில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாகவும், மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபட்டுள்ளது.

டைனமைட், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் லைட் கொர்ஸ் மீன்பிடி முறைகளால் மீன் வளத்திற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்பை அவர் வலியுறுத்தினார்.

மீன் வளத்தை எதிர்காலத்திற்காகப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. வின்ச் பயன்பாடு கடற்கரையில் உள்ள கடல் தாவரங்களை அழிப்பதாகவும், ஒரு நாடாக ஒட்டுமொத்தமாக சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் .

குறுகிய கால ஆதாயங்களை விட நீண்ட கால நன்மைகளைக் கருத்தில் கொண்டு, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம், போஷாக்கு மற்றும் சுகாதார நிலை ஆகிய அனைத்து காரணிகளையும் சமநிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்