உள்ளூர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவதுடன் படகுகளும் பறிமுதல் செய்யப்படும் – கடற்றொழில் அமைச்சர்

இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று முதலாம் திகதி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறலானது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ள நிலையில் இது தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை.

தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர் என கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் அவ்வாறு அத்துமீறிய இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவித்து;ளளாhர்

🛑 வேலைவாய்ப்பு 🛑

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்