உள்ளூர்

செம்மணி புதைகுழியில் 30 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகள் மற்றும் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் நடவடிக்கைகள் நேற்று (02-07) நடைபெற்றது.

அன்றைய பணிகளில், நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மேலும் சுமார் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் குழப்பமான முறையில் காணப்பட்டதால், அவற்றை அகழ்ந்து எடுக்க பணியாளர்கள் சவால்களை சந்தித்துள்ளனர்.
மேலும், நேற்றைய அகழ்வு பணிகளில் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தமாக 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன்;, பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் அகழ்வு பணிகள் நேற்று (02-07) ஆரம்பிக்கப்பட்டது.

அதே நேரத்தில், சந்தேகமான பகுதிகளில் அகழ்வு பணிகளுக்கு முன்னதாக துப்பரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்