இந்தியா உள்ளூர் சினிமா முக்கிய செய்திகள்

இலங்கையரும் பாலிவுட் நடிகையுமான ஜாக்லின் பெர்னாண்டசின் 200 கோடி மோசடி வழக்கு திடீர் திருப்பம்

பாலிவுட் நடிகையும் இலங்கைப் பிறப்பான ஜாக்லின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது 200 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கை மையமாகக் கொண்டது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சுகேஷ் சந்திரசேகர் என்கிற மோசடிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஜாக்லின் விலை உயர்ந்த பரிசுகள் பெற்றதாக கூறப்பட்டு, அவரும் இதில் தொடர்புடையதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜாக்லின், ‘நான் எந்தவொரு மோசடிக்கும் காரணம் அல்ல் சுகேஷ் எனை ஏமாற்றியுள்ளார்’ என்று கூறி, தன்னை இந்த வழக்கிலிருந்து விலக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றம், இருதரப்பின் வாதங்களையும் கவனித்தபின், ஜாக்லினின் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் குற்றவாளி தானா இல்லை என்பது நீதிமன்ற விசாரணை மூலமாகவே முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

ஜாக்லின் தரப்பில், ‘நான் பிரபலமாக இருப்பதால் தான் இவ்வளவு பெரிய வழக்கில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. நான் பெறும் பரிசுகளை கொடுத்தவர் மோசடிக்காரரானார் என்பதை எனக்கு முன்பே தெரிந்திருக்க முடியாது’ என்றார்.

மற்றபுறம், அதிகாரிகள், ‘ஜாக்லின், சுகேஷின் மோசடி பின்னணி தெரிந்தும், அவரிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்
இது சட்டத்தை மீறும் செயல்’ என தெரிவித்தனர்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு தயாராகிறது. ஜாக்லின் மீது குற்றச்சாட்டுகள் தொடரப்படுவதை நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிப்பு

ஆனமடுவ வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயின்று வந்த பேருந்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.   ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன
சினிமா

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் நேரில் மன்றுக்கு வருமாறு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி உத்தரவு

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ்,