உள்ளூர்

அமெரிக்காவுடன் தொடரந்து பேசி வரியை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்-வர்த்தக சம்மேளனம்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்திருந்த 44% தீர்வை வரியை 30ம% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த வரிக் குறைப்பை மேலும் குறைப்பதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை வர்த்தக சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கான பிராந்திய போட்டியாளர்களின் கட்டணக் கட்டமைப்பை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு பயனுள்ள மற்றும் முக்கியமான முதல் படியாக கட்டணக் குறைப்பைக் கருதுவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் இதைவிடக் குறைந்த வரி வீதங்களில் பயனடைய வாய்ப்புள்ளதால், ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் மேலும் வரிக் குறைப்பைப் பெறுவதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பயனுள்ள உரையாடல்கள், தொழில்துறை கருத்துகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆலோசனைகள் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்