உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் 800 கிலோ கடத்தல் பொருட்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டதுடன் 4வர் கைது

கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், 800 கிலோகிராம்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் கடத்தப்பட்ட போது கடந்த ஜூலை 11ஆம் தேதி கிளிநொச்சி கடற்கரையின் அருகே பறிமுதல் செய்யப்பட்டன.

வட மத்திய கடற்படை தளபதிக்குட்பட்ட SLNS புவனேகா எனும் கட்டுப்பாட்டுப் படையணி மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான இரண்டு வாகனங்கள் நிறுத்திசோதிக்கபட்டன.

இதில் 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் தூள், 273 கிலோ உலர் இஞ்சி மற்றும் அனுமதியில்லாத மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் என்பனவும் கண்டறியப்பட்டன.

இந்த கடத்தலில் தொடர்புடையவர்களாக வயது 39 முதல் 49 வரையிலான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏறக்கண்டி, கள்முனைக்குடி, திருகோணமலை மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும், கடுனாயக்கவில் உள்ள சுங்க தடுப்பு அலுவலகத்துக்கு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்