உள்ளூர்

வடக்கில் 33 வைத்தியசாலைகள் செவிலியர்களின்றி இயங்குகுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்

வடமாகாணத்தில் உள்ள 33 முதன்மை வைத்தியசாலைகள் ஒரே ஒரு செவிலியருமின்றி இயங்கிவருகின்றன என சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா தெரிவித்தார்.

நாகதீப வைத்தியசாலையின் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், இவ்வகை வைத்தியசாலைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவற்றை காலப்போக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அடுத்த இரண்டு மாதங்களில் 300 புதிய செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
மேலும், அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் மேலும் 300 பேர் இணைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆட்சியின் கீழ் வடமாகாணத்தின் தற்போதைய செவிலியர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்றார்.

மேலும், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் – எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் கருவிகள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை – பராமரிப்பில் சுகாதார துறையின் குறைப்பாடுகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தேவைக்கு தீர்வாக, பராமரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து புதிய பராமரிப்பு முறைமையை உருவாக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

எனினும், அரசு பணியமர்த்தல் முறைகள் தொடர்பில் கடந்த சில நாட்களில் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, பல தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, துணை மருத்துவ சேவைகளுக்கான நியமனங்களில் நீடிக்கும் குறைப்பாடுகளும், திட்டமின்றி இடம்பெறும் பணியமர்த்தல் நடவடிக்கைகளும், ஆரோக்கியத் துறையில் திறன்குறைவுகளை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்