உள்ளூர்

வவுனியாவில் , வியாபாரிகளுக்கும் மாநகர சபை ஊழியர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு

இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றும் செயற்பாடு இன்று வவுனியா மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர முதல்வர் சு.காண்டீபன் இதுகுறித்து தெரிவிக்கையில், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக இந்தக் கடைகள் இருந்ததால், அவற்றை அகற்றும் முடிவை மாநகர சபை எடுத்ததாக கூறினார்.
இதற்கு முந்தையதான கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடைகளை அகற்றத் தொடங்கினர்.

இதனால் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே முரண்பாடுகள் மற்றும் தள்ளுமுள்ளு நிலைகள் உருவாயின.
வியாபாரிகள் தமக்கான மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

ஆனால் மாநகர முதல்வர், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தோடு கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இனி கால அவகாசம் வழங்க முடியாது என உறுதியுடன் தெரிவித்தார்.

இதேநேரம், வன்முறைத் திருப்பங்களை தவிர்க்க, பொலிஸாரும் தலையிட்டு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு, வியாபாரிகள் உடன்பாட்டுக்கு வந்து, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்