உள்ளூர் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு கார்டினலின் கோரிக்கையின் பேரில் நியமனம் கொடுப்பது ஏற்புடையதல்ல – பொதுஜன பெரமுன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க, இரண்டு உயரதிகாரி காவல்துறையினரை கத்தோலிக்கக் குழுவின் வேண்டுகோளின் பேரில் நியமித்ததாக அரசாங்கம் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன SLPP கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, அமைச்சர் பிமல் ரத்னாயக்க சமீபத்தில் வெளிப்படுத்தியதாவது, கொழும்பு ஆயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க சபையின் கோரிக்கையின் பேரில் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சேனவிரத்ன மற்றும் மூத்த பொலிஸ்மா கண்காணிப்பாளர் சனி அபேசேகரா ஆகியோர் விசாரணைகளை மேற்பார்வையிடும் நிலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இத்தகவலைத் தொடர்ந்து, SLPP உறுப்பினர் சாந்த பண்டாரா ஊடகவியலாளர்களை சந்தித்து கூறியதாவது:
ஒரு நாட்டை நிர்வகிக்கும்போது பொறுப்பும், வெளிப்படைத்தன்மையும் மிக அவசியம்.
மக்கள் நம்பிக்கையை பெற்ற நபர்களே இத்தகைய பொறுப்புப் பதவிகளில் நியமிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை குலைக்கப்படும்.’

மேலும் அவர் கூறுகையில், ‘நாங்கள் கார்டினலை மதிக்கிறோம். ஆனால், ஒரு நாடை நிர்வகிப்பது வேறு விஷயம்.
கார்டினலின் கோரிக்கையோ அல்லது யாரேனும் சொல்வதாலோ அரசியல் முடிவுகள் மற்றும் நியமனங்கள் எடுக்கப்படக்கூடாது. அரசாங்கம் இதுபற்றி ஆழமான புரிதலை பெற வேண்டும்’ எனக் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்