உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் நல்லூர் கந்தனின் திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் பயணத்துக்கு விசேட சலுகை

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:

தற்போது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான கட்டணங்கள் பின்வருமாறு உள்ளன:

இருவழி கட்டணம் – ரூ. 28,300

ஒருவழி (காங்கேசன்துறை முதல் நாகபட்டினம்) – ரூ. 12,100

ஒருவழி (நாகபட்டினம் முதல் காங்கேசன்துறை) – ரூ. 16,000

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பெறக்கூடிய விசேட சலுகைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இக்கப்பல் சேவை, செவ்வாய்கிழமை தவிர்ந்த பிற ஆறு நாட்களிலும் வழமைபோல் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. சேவையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவை தொடர்பான தகவல்கள் முற்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் பணிப்பாளர் ஜெயசீலன் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்