உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றி தெரிந்தும் நடவடிக்கைஎடுக்காத நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் பொலிஸ் ஆணைக்குழுவில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரை பணிநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிக்கும் வகையில், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு தேவையான பணிப்புரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, நிலந்த ஜெயவர்தன் தனது கடமைகளை புறக்கணித்ததாகவும், குற்றவியல் நடவடிக்கைக்கு தகுந்த வகையில் செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இதனடிப்படையில், அவர்மீது ஒழுக்காற்று விசாரணை நடந்து, அவர் செய்த குற்றச் செயலுக்கு சட்டப்படி வழக்குத் தொடரப்பட வேண்டும் என பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்