உள்ளூர்

கொழும்பு கண்டி ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனையவை மக்கள் நலனுக்கே பயன்படுமென்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

நாட்டின் அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் (கொளும்பு மற்றும் கண்டி மாளிகைகள் தவிர) மக்களின் நலனுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும். தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடியாளர்கள் தண்டனைத் தவிர வேறு வழியில்லை; சட்டம் தன்னிச்சையாக செயல்படும், அரசியல் தலையீடு இருக்காது.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் திட்டமிட்டு நிறைவேற்றப்படும். ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வறுமையை ஒழிக்க “சமூக சக்தி” எனும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கி இயக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Ask ChatGPT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்