உலகம் முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் விமான விபத்து 49 பேர் பலி

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன விமானம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

டின்டா விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து திடீரென மாயமானது.

அந்த விமானத்தின் எரிந்த உடற்பகுதியை ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரும் உயிர் பிழைத்திருக்கச் சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த விமானம், பயணத்தின் இறுதிக்கட்டத்தில் டின்டா விமான நிலையத்தை நெருங்கும் தருணத்தில் விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

விமானம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், முழுமையான விசாரணைக்குப் பின் மட்டுமே விபத்தின் காரணம் உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்