கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்
இவர், குடும்பப் பிரச்சனையை ஒட்டிய விசாரணைகளுக்காக இன்று பொலிஸாரால் அழைத்து வரப்பட்டிருந்தார்.
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், தான் அணிந்திருந்த சட்டையின் ஒரு பகுதியை கிழித்து, விசாரணை கூண்டிற்குள் இன்று மதியம் 12.08 மணியளவில் தூக்குபோட்டு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

