உலகம் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பலஸ்தீனை ஒரு நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும், நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தின் போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மக்ரோன், ‘காசா பகுதியில் போரை நிறுத்தி பொதுமக்களை காக்கும் நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.
உடனடியாக சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லா பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்,’ எனக் கூறியுள்ளார்.

அத்துடன், காசா மக்களுக்கு தற்போது பெரும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும், அதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், அது தொடர்பான விமர்சனங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்