உள்ளூர் முக்கிய செய்திகள்

மொனராகலையில் அநுரவுக்கு எதிராக விவசாயிகள் போர் கொடி

மொனராகலையில் செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நேற்று (26-07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், செவனகல சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான தொகை செலுத்தப்படாததற்கும் நிலுவையில் உள்ள பணம் வழங்கப்படாமைவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அவர்களின் வலியுறுத்தலின்படி, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு டொன்னுக்கு 15,000 ரூபா வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் தற்போது அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலை தொடர்ந்தால், மொனராகலையில் ‘அநுர கோ கம’ என்ற பிரமாண்டமான மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும், தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு கடும் எதிர்வினை ஏற்படும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்