உள்ளூர்

யாழ் செமமணியில் இன்று புதிதாக என்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை-

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இன்று மேலும் ஐந்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இவை கடந்த நாட்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகள் என குறிப்பிடப்படுகிறது. இன்று புதிதாக எந்த தொகுதியும் கண்டறியப்படவில்லை.

கடந்த ஏழு நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வுகள், நீதிமன்றம் ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் 01’ மற்றும் ‘இலக்கம் 02’ எனப் பெயரிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிக்காக 45 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 22வது நாளாக பணி முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஏழு நாட்களில் 36 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 101 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 95 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளுடன் காணப்பட்ட ஒரு பொலித்தீன் பை மேலதிக ஆய்விற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்